குளித்தலை - Kulithalai

சிபிஐஎம் சார்பில் தொழிலாளர் தின விழா

நாடு முழுவதும் உழைப்பாளர் தினம் இன்று அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றியம் இராஜேந்திரம் பேருந்து நிறுத்தம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இராஜேந்திரம் கிளை சார்பில் கட்சி கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கிளை உறுப்பினர் சுரேஷ் கலந்துகொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்தார். இந்நிகழ்வில் குளித்தலை ஒன்றிய செயலாளர் முத்துசெல்வன் விவசாய தொழிலாளர்கள் ஒற்றுமை குறித்து முழக்கமிட்டார். பிறகு இராஜேந்திரம் கிளை தலைவர் சிவா, முக. சிவா, மாவட்ட குழு உறுப்பினர் ராஜீ, தரைக்கடை சங்கம் நிர்வாகிகள் ராஜேந்திரன், வடிவேல் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இதில் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் உடனிருந்தனர்.

வீடியோஸ்


వికారాబాద్ జిల్లా