கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சி அவசர கூட்டம் நகர்மன்ற தலைவர் சகுந்தலா தலைமையில் இன்று மாலை நடைபெற்றது. நகராட்சி ஆணையர் நந்தகுமார், நகர்மன்றத் துணைத் தலைவர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அலுவலக மேலாளர் தேவராஜன் தீர்மானங்களை வாசித்தார்.
குளித்தலை நகராட்சி பகுதியில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வது, கலைஞர் நூற்றாண்டு விழா பேருந்து நிலையத்தில் ரூ. 4. 50 லட்சம் மதிப்பில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது, மற்றும் சுங்ககேட் பகுதியில் அமைந்துள்ள நகராட்சி 4 கடைகளுக்கு வரும் மார்ச் 02 ஆம் தேதியுடன் 9 ஆண்டுகள் முடிவடைகிறது.
இதனை தொடர்ந்து அந்த கடைகளுக்கு வாடகை உயர்த்த நகர்மன்றத்தில் அனுமதி கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து மன்ற அனுமதிக்காக வைக்கப்பட்ட 27 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. அப்போது குறுக்கிட்ட நகராட்சி வார்டு உறுப்பினர் மன்ற பொருட்களை வைக்கும் முன்னர் அனைத்து வார்டு உறுப்பினர்களையும் வரவழைத்து தீர்மாண பொருட்களை வார்டு உறுப்பினர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டுமெனவும் ஏற்கனவே கேட்டுக்கொண்டதால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் பிறந்தநாள் வருவையொட்டி நகர் மன்ற உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து நகர்மன்ற தலைவர் இனிப்புகள் வழங்கினார்.
இதில் நகர் மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.