புகையிலை விற்ற மளிகை கடை உரிமையாளர் மீது வழக்கு
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர்மலை பகுதியைச் சேர்ந்தவர் மணிவாசகம் மகன் விவேகானந்தன் (42). இவர் தனது மளிகை கடை முன்பு தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்த குளித்தலை போலீசார் புகையிலை விற்ற விவேகானந்தன் மீது இன்று வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த 300 கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.