கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடிவீஸ்வரம் அழகம்மன் சமேத சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று கார்த்திகை மாத பௌர்ணமியை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட தேரில் சுந்தரேஸ்வரர், அழகம்மன் உலா வரும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தேரை இழுத்தனர். சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்த நிலையில் கோவில் நிர்வாகம் சார்பில் அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.