கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆட்சியரகத்தில் இன்று மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில், பொது மக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 460 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன. மேலும், மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்தார்.