குமரியில் 33 வாகனங்கள் 8 லட்சத்திற்கு ஏலம்

82பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டத்தில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 41 வாகனங்களுக்கு இன்று (டிச. 16) ஏலம் நடைபெற்றது. நாகர்கோவில் மறவன் குடியிருப்பு ஆயுதப்படை வளாகத்தில் ஏடிஎஸ்பி மதியழகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஏலத்தில் மொத்தம் 33 வாகனங்கள் பொதுமக்களால் ஏலம் எடுக்கப்பட்டன. மொத்தம் 8 லட்சத்து 51 ஆயிரத்து 506 ரூபாய்க்கு வாகனங்கள் ஏலம் போனதாக போலீசார் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி