குளச்சல் - Kulachal

வெள்ளிச்சந்தை: பைக் விபத்தில் ஒர்க் ஷாப் ஊழியர் உயிரிழப்பு

வெள்ளிச்சந்தை: பைக் விபத்தில் ஒர்க் ஷாப் ஊழியர் உயிரிழப்பு

குருந்தன்கோடு அருகே உள்ள ஊத்துவிளை பகுதி சேர்ந்தவர் விஜயகுமார் மகன் ஆனந்த் (20). இவர் பேயோடு பகுதியில் உள்ள ஒரு ஒர்க் ஷாப் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். நேற்று(செப்.16) வழக்கம்போல் வேலைக்கு சென்ற ஆனந்த் இரவு வேலை முடிந்து வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். சேனவிளை பகுதியில் வைத்து திருமண வீட்டிற்கு சென்ற வேன் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஆனந்த் படுகாயம் அடைந்தார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஆனந்த் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இது குறித்த புகாரின் பேரில் வெள்ளிச்சந்தை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வீடியோஸ்


ఉమ్మడి వరంగల్ జిల్లా