வெள்ளையன் மறைவு: கன்னியாகுமரியில் கடைகள் இன்று அடைப்பு.

83பார்த்தது
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் நேற்று முன்தினம் உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவரது நல்லடக்கம் சொந்த ஊரான திருச்செந்தூர் அருகே இன்று (12-ம் தேதி) நடைபெறுகிறது. இந்நிலையில்
வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் 1000 - த்துக்கு மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதி,
சன்னதி தெரு, படகு தளம் செல்லும் சாலை, கடற்கரை சாலை, சர்ச் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
இதனால் சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி வெறிச்சோடி காணப்படுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி