மார்த்தாண்டத்தில் கல்லூரியில் ஓண விழா எம்பி பங்கேற்பு

61பார்த்தது
கேரளாவில் திருவோணம் பண்டிகை வரும் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்திலும் இந்த விழா கொண்டாடப்படுவது வழக்கம். மேலும்  இங்குள்ள கல்லூரிகளில் ஏராளமான கேரள மாணவ மாணவிகள் பயின்று வருவதால் கல்வி நிறுவனங்களிலும் ஓணம் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

      இதையொட்டி   மார்த்தாண்டம் அருகே உள்ள இலவுவிளை இன்ஜினியரிங் கல்லூரியில் நேற்று (12-ம் தேதி) ஓண விழா கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு இலவிளை சந்திப்பிலிருந்து மாணவ மாணவிகள் பங்கேற்ற ஊர்வலம் தொடங்கி கல்லூரி சென்றடைந்தது.

     ஊர்ரத்தில் கல்லூரி மாணவ மாணவிகள் மாவேலி வேடம் அணிந்து வந்தனர். மேலும் மாணவ மாணவிகள் கேரள பாரம்பரிய உடைகள் அணிந்து வந்திருந்தனர்.

     முன்னதாக நடைபெற்ற கூட்டத்திற்கு கல்லூரி தாளாளர் சதீஷ்குமார் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக விஜய் வசந்த எம்பி, தாரகை கத்பட்  எம்எல்ஏ மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டார்கள். மேலும் கல்லூரி வளாகத்தில் அத்த பூ கோலம் போட்டி மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு  பரிசுகள் வழங்கப்பட்டன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி