வேளாண் விரிவாக்க மையங்களில் பணமில்லா பரிவர்த்தனை வசதி

74பார்த்தது
வேளாண் விரிவாக்க மையங்களில் பணமில்லா பரிவர்த்தனை வசதி
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வேளாண் விரிவாக்க மையங்களில் பணமில்லா பரிவர்த்தனை வசதி செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர், "ஜிபே, போன் பே, பேடீ எம், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு ஆகியவை மூலம் விவசாயிகள் தங்களுக்கு தேவையான விதைகள், உயிர் உரங்கள், நுண்ணூட்ட உரங்கள், ஜிங்க் சல்பேட் போன்றவற்றை உடனுக்குடன் பெற்றுக் கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி