குளச்சல் - Kulachal

மதுப்பழக்கம்: மனைவி கண்டித்ததால் கணவர் தீ குளித்து தற்கொலை

மதுப்பழக்கம்: மனைவி கண்டித்ததால் கணவர் தீ குளித்து தற்கொலை

இரணியல் அருகே உள்ள காஞ்சிரவிளை  பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (49) கட்டிட வேலை செய்து வந்தார். மது போதைக்கு அடிமையான இவர் அடிக்கடி குடித்துவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 9-ம் தேதி இரவு கோபால கிருஷ்ணன் மதுபோதையில் வீட்டுக்கு வந்த போது, மனைவி இதனை கண்டித்துள்ளார்.இதில் மன வேதனை அடைந்த கோபாலகிருஷ்ணன் மோட்டார் சைக்கிளில் இருந்த பெட்ரோல் எடுத்து வீட்டுக்கு வெளியே சென்று தனக்கு தானே ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதை பார்த்த அவர் மனைவி மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குமரி அரசு மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த கோபாலகிருஷ்ணன் இன்று உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி அனிதா (41) என்பவர் அடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


ఉమ్మడి వరంగల్ జిల్లా