2 நாள் விடுமுறை; விவேகானந்தர் மண்டபத்தை 8 ஆயிரம் பேர் பார்வை

67பார்த்தது
சுற்றுலா தளமான கன்னியாகுமரியில் கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டுள்ளது. இவற்றைக் காண தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் படகுகளில்  சென்று பார்த்து வருகின்றனர்.

       இதற்காக தமிழக அரசு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் மூலம்  படகு போக்குவரத்தை நடத்தி வருகிறது. இந்த படகுகள் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இடைவெளி இன்றி இயக்கப்பட்டு வருகிறது.

        இந்த நிலையில் நாடு முழுவதும் கடந்த இரண்டு நாட்கள் விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை காரணமாக கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலை  மோதியது. கடந்த இரண்டு நாட்கள் தொடர் விடுமுறையில் விவேகானந்தர் மண்டபத்தை 8 ஆயிரத்து 12 பேர் பார்வையிட்டு  உள்ளனர்.   இதில் விநாயகர் சதுர்த்தி விடுமுறை நாளான நேற்று முன்தினம் (7-ம் தேதி) 3 ஆயிரத்து 400 பேரும், ஞாயிற்றுக்கிழமை அன்று 4 ஆயிரத்து 612 பேரும் பார்வையிட்டுள்ளனர் என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
கடலுக்குள் கண்ணாடி பாலம் அமைப்பதால் திருவள்ளுவர் சிலைக்கு கடந்த ஒரு வருடமாக பார்வையாளர் அனுமதி இல்லை என்பது குறிப்பிடத் தகுந்ததாகும்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி