குளச்சல் - Kulachal

சீரடி ஸ்ரீ அனுக்கிரக சாய்பாபா அன்பாலயம் வருஷாபிஷேக விழா

சீரடி ஸ்ரீ அனுக்கிரக சாய்பாபா அன்பாலயம் வருஷாபிஷேக விழா

இரணியல் அருகே சாய் நகர், சீரடி ஸ்ரீ அனுகிரக சாய்பாபா அன்பாலயத்தில் 4- வது வருஷாபிஷேக விழா இன்று தொடங்கி நாளை மறுநாள்   25-ம் தேதி வரை நடைபெற்று வருகிறது.       இன்று   நாகர்கோவில், பட்டகசாலியன் விளை, ஷிவானி இசை மற்றும் நாட்டியப்பள்ளி  மாணவிகளின் பரதநாட்டியம் நிகழ்ச்சி நடைபெற்றது.   இந்த நிகழ்ச்சிக்கு நிர்வாக இயக்குனர் டாக்டர் ஜி கோலப்பன் தலைமையில் வள்ளலார் பேரவை மாநிலத் தலைவர் சுவாமி பத்மேந்திரா முதல் அகல் விளக்கேற்றி குருஸ்தானில் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்கள்.         தொடர்ந்து குமாரகோவில் சீதாலட்சுமி மாதாஜி திருவிளக்கு பூஜை நடத்தினார்கள். சிறப்பு நிகழ்ச்சியாக  சீரடி சாய்பாபா துதிகள் பாடி பரதநாட்டிய  நிகழ்ச்சியை குரு. டாக்டர். பிரவீணா துரைசிங் வழங்கினார்கள்.   தொடர்ந்து தூப் ஆர்த்தி, புஷ்பாஞ்சலி பூஜை, கிரிவம், இரவு ஆர்த்தி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் மற்றும் நிர்வாகிகள் விழாவினில் கலந்து கொண்டார்கள்.

வீடியோஸ்


ఉమ్మడి వరంగల్ జిల్లా