குளச்சல் - Kulachal

புதுக்கடை அருகே மூதாட்டிக்கு பாலியல் தொல்லை

புதுக்கடை அருகே மூதாட்டிக்கு பாலியல் தொல்லை

புதுக்கடை அருகே ஹெலன் நகர் கடற் கரை கிராமத்தை சேர்ந்தவர் மூதாட்டி. இவர் தனியாக வசித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் ஆன்டனி பிரின்ஸ் (30). இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். நேற்று அதிகாலை சுமார் 2 மணியளவில் ஆன்டனி பிரின்ஸ், மூதாட்டி வீட்டில் புகுந்துள்ளார். அங்கு உறங்கி கிடந்த மூதாட்டி அருகில் சென்று படுத்து, பாலியல் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். திடீரென விழித்த மூதாட்டி சத்தம் போட்டு மறுப்பு தெரிவிக்கவே, அவரை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த மூதாட்டி குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிட்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜானகி வழக்கு பதிவு செய்து ஆன்டனி பிரின்சை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வீடியோஸ்


ఉమ్మడి వరంగల్ జిల్లా