
திண்டுக்கல்: மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை
திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே அம்மையநாயக்கனூர் அரசு மேல்நிலைப் பள்ளி 11-ம் வகுப்பு மாணவன் யோகபாபு (17). இவர் வணிகவியல் பாடத்தில் தோல்வியடைந்ததால், மனமுடைந்து ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.