
ஊத்துபட்டி: பிரசவத்திற்கு பின் பெண் இறப்பு; போலீசார் விசாரணை
நிலக்கோட்டை என். ஊத்துப்பட்டியைச் சேர்ந்த தம்பதியினர் மகாராஜன் அபிநயா. அபிநயா நேற்று முன்தினம் (அக்.3) பிரசவத்திற்காக மட்டப்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார். அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. 1 மணி நேரத்தில் ரத்தப்போக்கு ஏற்பட்ட நிலையில், மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.