நத்தம் - Natham

சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீது டிராவல்ஸ் வேன் மோதி பலி

சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீது டிராவல்ஸ் வேன் மோதி பலி

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே சிறு குடியைச் சேர்ந்த ராசு என்பவரின் மனைவி பூமணி (60). இவர் நேற்று திருப்பத்தூர் அருகே உள்ள உறவினரின் துக்க வீட்டுக்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பிய அவர் பஸ்சில் வந்து சமுத்திராபட்டியில் இறங்கி சிறுகுடி செல்ல சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது நத்தம் பகுதியிலிருந்து கொட்டாம்பட்டி நோக்கி சென்ற டிராவல்ஸ் வேன் மோதியதில் பூமணி சம்பவ இடத்தில் பலியானார். இது குறித்து நத்தம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோஸ்


భద్రాద్రి కొత్తగూడెం జిల్లా