மேட்டுப்பாளையம் - Mettupalayam

நாயை அடித்து கொல்ல முயன்ற வாலிபர்கள் மீது வழக்கு

நாயை அடித்து கொல்ல முயன்ற வாலிபர்கள் மீது வழக்கு

கோவை அருகே உள்ள சுந்தராபுரம் கிருஷ்ணா நகர் காந்திஜி ரோட்டில் நேற்று தெரு நாய் ஒன்றை அப்பகுதியில் உள்ள 2 வாலிபர்கள் தாக்கினர். இதனால் நாய் படுகாயத்துடன் ஓலமிட்டது.  அப்போது அங்கு வந்த நளினி என்பவர் வாலிபர்களிடமிருந்து நாயை மீட்டு அருகில் உள்ள கால்நடை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.  அங்கு நாய்க்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு இது குறித்து நளினி சூலூரில் உள்ள விலங்குகள் மீட்பு மற்றும் பாதுகாப்பு மையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து அந்த அமைப்பைச் சேர்ந்த ஆஸ்டிலின், நாயை தாக்கிய நபர்களை பிடித்து நடவடிக்கை எடுக்கும்படி சுந்தராபுரம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் நாயை அடித்து கொல்ல முயன்ற உசைன் மற்றும் ஒரு வாலிபர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வீடியோஸ்


మహబూబ్‌నగర్ జిల్లా