மேட்டுப்பாளையம் - Mettupalayam

குளத்தில் மண் எடுக்க தடை- வட்டாட்சியர் உத்தரவு!

குளத்தில் மண் எடுக்க தடை- வட்டாட்சியர் உத்தரவு!

அன்னூர் வட்டத்துக்கு உட்பட்ட அ. மேட்டுப்பாளையம் ஊராட்சியில் உள்ள குளத்தில் விவசாயிகள் வண்டல் மண் எடுப்பதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் விவசாயிகள் பெயரில் சிலர் இரவு நேரங்களில் கிராவல் மண்ணை வெட்டி கடத்தியதாக தெரிகிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் கிராம நிர்வாக அதிகாரி, வருவாய் ஆய்வாளர், வட்டாட்சியர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோரிடம் புகார் அளித்தனர். இருப்பினும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை இதனால் ஆத்திரமடைந்த மக்கள் குளத்தில் மண் கடத்த வந்த லாரிகள் இயந்திரங்களை சிறை பிடித்து கடந்த நான்காம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதன் பேரில் அ. மேட்டுப்பாளையம் குளத்தில் மண் எடுப்பதற்கு தடைவிதித்து அன்னூர் வட்டாட்சியர் குமரி ஆனந்தன் நேற்று(செப்.6) உத்தரவிட்டுள்ளார்.

வீடியோஸ்


మహబూబ్‌నగర్ జిల్లా