நாய்க்கு ஈமச்சடங்கு செய்த உரிமையாளர்!

65பார்த்தது
மேட்டுப்பாளையத்தில் மணி நகர் அரசு பள்ளி பின்புறம் வசிக்கும் அருள்வேல் என்பவர் கடந்த ஆறு ஆண்டுகளாக டேஸ் இனத்தைச் சேர்ந்த ஆண் நாய்க்குட்டி ஒன்றை வளர்த்து வந்துள்ளார். அதற்கு ஷேடோ என்று பெயரிட்டு வளர்த்துள்ளார். காய்கறி வியாபாரம் செய்து வரும் அருள்வேல், ஷேடோவை தனது குடும்பத்தில் ஒருவராகப் பாவித்து பாசத்துடன் வளர்த்து வந்துள்ளார். வீட்டிலிருந்து வெளியே வந்த ஷேடோவை தெருவில் இருந்த நாய்கள் கடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் நாய்க்கு உடல் பகுதியில் காயம் ஏற்பட்டு ஷேடோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். அங்கு நாய்க்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள். அதன் உடலில் விஷம் கலந்து விட்டதாகவும் உடல் உறுப்புகள் செயல் இழந்து விட்டதாகவும் அதனை உயர்ப்பிப்பது மிகவும் கஷ்டமான செயலாக மாறிவிட்டதாக தெரிவித்துள்ளனர். மனவேதனையில் அதனை வீட்டுக்கு எடுத்து வந்துள்ளார். வீட்டிற்கு வந்தவுடன் அந்த நாய் பரிதாபமாக உயிரிழந்தது. வீட்டில் விளக்கு ஏற்றி இரவு முழுவதும் அந்த நாய்க்கு காரியங்கள் செய்த பின்னர் நேற்று தனக்கு சொந்தமான வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துச் சென்று மரியாதை உடன் கோவிந்தம் பிள்ளை சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி