கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்

52பார்த்தது
கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்
கோவில்பாளையம் காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கோவில்பாளையம் தனிப்படை காவல்துறையினர் இன்று (அக்.,3) வையாபுரி நகர் அருகே சென்று சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தவரிடம் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (56) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து அவரை காவல்துறையினர் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

தொடர்புடைய செய்தி