பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு.. உயிரிழப்புகள் அதிகரிக்கும் என அச்சம்

61பார்த்தது
பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு.. உயிரிழப்புகள் அதிகரிக்கும் என அச்சம்
சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சியில் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. பார்த்தசாரதி என்பவர் வான்வழி சாகசங்களை கண்டு களித்த போது திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். மேலும், பலர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்பட்டுகிறது.

தொடர்புடைய செய்தி