வீட்டில் புகுந்த நகை கொள்ளை- ஒருவர் கைது!

53பார்த்தது
கோவை மாவட்டம் அன்னூர் அருகே கல்ராசிபாளையம் பகுதியில் குடியிருப்பு ஒன்றில் புகுந்து தங்க நகைகளை கொள்ளையடித்த வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கல்ராசிபாளையம் பகுதியைச் சேர்ந்த தங்கவேல் என்பவர் தனது குடும்பத்துடன் கடந்த 13ஆம் தேதி வெளியில் சென்றிருந்தார். அப்போது பகல் நேரத்தில் காரில் வந்த இரண்டு நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். அவர்கள் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 8 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து, வீட்டில் இருந்த அனைத்து அறைகளையும் சோதனை செய்துள்ளனர். வீட்டிற்கு திரும்பிய தங்கவேல், திருட்டு சம்பவம் குறித்து அன்னூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணை நடத்திய காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதன் அடிப்படையில், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியைச் சேர்ந்த அஜீத் என்ற முனியாண்டியை நேற்று கைது செய்தனர். கைதான நபரிடமிருந்து எட்டு சவரன் தங்க நகைகள் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ள போலீசார், இதில் தொடர்புடைய மற்றொரு நபரை தேடி வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி