1500 மதராசா மாணவர்கள் பங்கேற்ற மிலாது நபி ஊர்வலம்!

83பார்த்தது
மேட்டுப்பாளையத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பில் நபிகள் நாயகம் பிறந்தநாளை ஒட்டி 1500 மதரசா பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட மிலாது நபி ஊர்வலம் நடைபெற்றது. இஸ்லாமிய மக்கள் அதிகம் வாழும் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நபிகள் நாயகம் பிறந்தநாளை முன்னிட்டு அதனை கொண்டாடும் விதமாக மிலாது நபி ஊர்வலம் நடைபெற்றது. மேட்டுப்பாளையம் பெரிய பள்ளி வாசல் பகுதியில் இருந்து துவங்கிய இந்த ஊர்வலத்தை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் ஜயூப் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இதனையடுத்து உதகை சாலை, பேருந்து நிலையம், அண்ணாஜீராவ் சாலை என மேட்டுப்பாளையத்தின் முக்கிய சாலைகளின் வழியாக ஊர்வலமாக வந்த மிலாது நபி ஊர்வலம் வலம் வந்து மீண்டும் பெரிய பள்ளிவாசலில் நிறைவடைந்தது. 60 மதரசா பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் 1500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நபிகள் நாயகம் வழி நடப்போம் இந்தியா எங்கள் தாய்நாடு இஸ்லாம் எங்கள் வழிபாடு என்ற கோஷங்களை எழுப்பி ஊர்வலமாக வந்தனர். இந்த மிலாது நபி ஊர்வலத்தில் கலந்து கொண்டு ஊர்வலம் வந்த இஸ்லாமிய பள்ளி நிர்வாகிகள் மற்றும் குழந்தைகளுக்கு மேட்டுப்பாளையம் இந்து சமுதாய நலச்சங்கத்தின் நிர்வாகிகள் தண்ணீர் பாட்டில்கள், குளிர்பானம் உள்ளிட்டவைகளை வழங்கி வரவேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி