மேட்டுப்பாளையம் - Mettupalayam

சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சி; 5 பேர் கைது

சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சி; 5 பேர் கைது

காரமடை அருகே 15 வயது சிறுமி தனது பெற்றோர் உடன் வசித்து வருகிறார். இவர் 9ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார். சிறுமியை ஊட்டியை சேர்ந்த மோனிஷா, பல்லடத்தை சேர்ந்த தர்மராஜ் ஆகியோர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்றனர். இதில் விருப்பம் இல்லாத சிறுமி, தனது தோழி வாயிலாக சைல்டு ஹெல்ப் லைன்க்கு போன் செய்து உதவி கேட்டார். இதையடுத்து கோவை மாவட்ட குழந்தைகள் உதவி மைய அதிகாரி பரமேஸ்வரி (27) காரமடை போலீசாருடன் சென்று சிறுமியை மீட்டார். பின்னர் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற மோனிஷா (23), தர்மராஜ் (23), ராஜதுரை (30), கீதா (25), பவானி (24) ஆகியோரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர். சிறுமியை அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வீடியோஸ்


మహబూబ్‌నగర్ జిల్లా