மேட்டுப்பாளையம் - Mettupalayam

வீட்டு சாவியை தேடி எடுத்து நகை திருட்டு

வீட்டு சாவியை தேடி எடுத்து நகை திருட்டு

கோவை வெங்கிட்டாபுரம் நேதாஜி காலனியை சேர்ந்தவர் மதன்குமார் (30). கூலி தொழிலாளி. இவர் வேலைக்கு செல்லும்போது வீட்டை பூட்டி விட்டு சாவியை மின் பெட்டி அருகே வைத்து விட்டு செல்வது வழக்கம். இந்நிலையில், நேற்று (செப்.,20) அவரது மனைவி வீட்டில் இருந்த பீரோவை திறந்து பார்த்தபோது அதில் வைத்திருந்த 2 பவுன் தங்க செயினை காணாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். அவர்கள் சாவியை வைக்கும் இடத்தை ஏற்கனவே நோட்டமிட்டு மர்ம நபர் கதவை திறந்து நகையை திருடி சென்று விட்டனர். இது குறித்து மதன்குமார் சாயிபாபா காலனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

வீடியோஸ்


మహబూబ్‌నగర్ జిల్లా