திருப்பூர் - Tirupur

வடமாநில பெண் தூக்குப்போட்டு தற்கொலை

வடமாநில பெண் தூக்குப்போட்டு தற்கொலை

முன்னாள் காதலனுடன் போனில் பேசியதை கணவன் கண்டித்ததால் வடமாநில பெண் தூக்குப்போட்டு தற்கொலை மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் சுஷந்தாமண்டல் (வயது40) இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அனிமாமண்டல் (35) என்பவ ருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற் றது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் அனிமாமண் டல் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு கணவன் மற்றும் குழந்தை களை விட்டுவிட்டு பகலு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அவரு டன் சென்று விட்டதாக கூறப்படுகிறது. அவருடன் 2 வருடங்கள் வாழ்ந்து வந்த அனிமாமண்டல் கடந்த வருடம் திரும்பவும் சுஷந் தாமண்டலிடம் வந்துள்ளார். இருவரும் திருப்பூர் வந்துள்ளனர். ஊத்துக்குளி அருகே உள்ள முதலிபாளையம் பகுதியில் குடியி ருந்து வந்த இருவரும் பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் அனிமாமண்டல் மீண்டும் பகலுடன் அடிக்கடி போனில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதில் விரக்தி அடைந்த அனிமாமண்டல் வீட்டில் தனியே இருந்தபோது துண்டால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் கிடைத்த ஊத்துக்குளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


కామారెడ్డి జిల్లా