திருப்பூர்: சாக்கடை கால்வாயில் அடித்துச் செல்லப்பட்ட ஓய்வு பெற்ற அதிகாரி

80பார்த்தது
திருப்பூர் இடுவம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ராஜன் பென்னி(67). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் ஏரோநாட்டிக்கல் பிரிவில் பயிற்சியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். திருப்பூரில் இருந்து தினந்தோறும் ரயில் மூலமாக கோவையில் உள்ள கல்லூரிக்கு பணிக்கு சென்று வந்துள்ளார்‌ கடந்த 1ஆம் தேதி பணிக்கு சென்றவர் இரவு வீடு திரும்பவில்லை.

இதன் அடிப்படையில் உறவினர்கள் ராஜன் பென்னியை காணவில்லை என வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். தொடர்ந்து திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் இருந்த அகன்ற சாக்கடை கால்வாயில் விழுந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நேற்றிரவு முதல் திருப்பூர் வடக்கு தீயணைப்பு துறையினர் மற்றும் வடக்கு போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து சூசையாபுரத்திலிருந்து ராயபுரம் செல்லும் வழியில் உள்ள சாக்கடை கால்வாயில் அவரது இருசக்கர வாகனம் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் அவரது உடல் வேறு பகுதிக்கு அடித்துச் சென்றுஇருக்கலாம்என்ற அடிப்படையில்வடக்கு போலீசார்மற்றும்தீயணைப்பு துறையினர்தொடர்ந்துதேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி