திருப்பூர் - Tirupur

திருப்பூர்: உணவகத்தை சூறையாடிய இந்து முன்னணி நபர் கைது

திருப்பூர் போயம்பாளையம், அபிராமி தியேட்டர் ரோடு, கணபதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கணபதி (52). இவர் அப்பகுதியில் தள்ளுவண்டி கடையில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 25-ம் தேதி இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த ராசுக்குட்டி மற்றும் சிலர் விநாயகர் சதுர்த்தி வசூலுக்கு வந்துள்ளனர். அப்போது கணபதி ரூ. 550 நன்கொடை கொடுத்ததாக கூறப்படுகிறது. அதற்கு இந்து முன்னணி நிர்வாகிகள் ரசீது வழங்கி சென்றனர். தொடர்ந்து நேற்று முன்தினம்(செப்.2) இரவு 10 மணியளவில் ராசுக்குட்டி மற்றும் அவருடன் 4 பேர் மது போதையில் கணபதியின் ஹோட்டல் கடைக்கு சென்றுள்ளனர். தொடர்ந்து கணபதியிடம் ரூ. 3 ஆயிரம் நன்கொடை கொடுக்க வேண்டுமென கூறி தகராறில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே நன்கொடை கொடுத்துவிட்டதாக கணபதி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இந்து முன்னணி மற்றும் சில இந்து அமைப்புகளை சேர்ந்த கும்பல் கணபதியை தாக்க முயன்று தள்ளுவண்டி ஹோட்டல் கடையை சூரையாடியுள்ளனர். இது குறித்து கணபதி அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் அனுப்பர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த ராசுக்குட்டி (29) என்பவரை கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய 4 பேரை தேடி வருகின்றனர்.

வீடியோஸ்


కామారెడ్డి జిల్లా