சீர்காழி - Sirklai

கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: மூவர் படுகாயம்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூர் முக்கிய சாலையில் திருக்கடையூரில் இருந்து சீர்காழி நோக்கி நானோ கார் சென்று கொண்டிருந்தது. எதிரே சென்னையில் இருந்து வந்து கொண்டிருந்த மற்றொரு காரில் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நானோ காரில் இருந்த மூவர் படுகாயம் அடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வீடியோஸ்


நாகப்பட்டினம்