சீர்காழி - Sirklai

கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: மூவர் படுகாயம்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூர் முக்கிய சாலையில் திருக்கடையூரில் இருந்து சீர்காழி நோக்கி நானோ கார் சென்று கொண்டிருந்தது. எதிரே சென்னையில் இருந்து வந்து கொண்டிருந்த மற்றொரு காரில் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நானோ காரில் இருந்த மூவர் படுகாயம் அடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வீடியோஸ்


நாகப்பட்டினம்
Sep 16, 2024, 15:09 IST/கீழ்வேளூர்
கீழ்வேளூர்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

Sep 16, 2024, 15:09 IST
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்; மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்; மாவட்ட ஆட்சித்தலைவர் ப. ஆகாஷ், தலைமையில் நடைபெற்றது. வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மொத்தம் 129 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார். அதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் செவித்திறன் பாதிக்கப்பட்ட 01 மாற்றுத்திறனாளிக்கு ரூ. 3, 000 மதிப்பீட்டில் காதொலி கருவியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். இக்கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் திரு. கார்த்திகேயன் மற்றும் அரசு அலுவலர்கள்; பலர் கலந்து கொண்டனர்.