மயிலாடுதுறை விவசாயிகள் அமைச்சரிடம் புகார் மனு
மயிலாடுதுறையில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதனிடம் விவசாயிகள் நேற்று(செப்.11) புகார் மனு அளித்தனர். அதில் பருவம் தவறி பெய்த மழையினால் பாதிக்கப்பட்ட 980 ஹெக்டேர் சம்பா பயிர்களுக்கு தமிழக அரசு ரூ. 10 கோடி நிவாரணம் வழங்குவதாக அறிவித்தும், இதுநாள் வரை வழங்கவில்லை. பயிர் காப்பீட்டு நிறுவனம் 2023-2024ஆம் ஆண்டுகளுக்கு 16 கிராமங்களுக்கு மட்டும் குறைந்த அளவு காப்பீடு வழங்கியுள்ளதாக குற்றம் சாட்டினர். எனவே மழையினால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.