மூடப்பட்ட மதுபானக் கடை மதுப் பிரியர்களின் மிரட்டலால் திறப்பு

54பார்த்தது
வெள்ளப்பள்ளம் ஊராட்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் முற்றுகை போராட்டத்தால் மூடப்பட்ட மதுபானக் கடை மதுப் பிரியர்களின் மிரட்டலால் திறக்கப்பட்டது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த வெள்ளப்பள்ளம் ஊராட்சியில் 60க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட குடியிருப்பிற்கு அருகே இருக்கும் மதுபானக் கடையை அகற்றக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி மகளிர் அணியினரால் முற்றுகை போராட்டம் மதியம் முதல் நடைபெற்ற நிலையில் வேதாரண்யம் வட்டாட்சியர் திலகா , மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் தற்காலிகமாக மதுப்பானக்கடை மூடப்படும் என்று முடிவு எட்டப்பட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் போராட்டக் குழுவினர் சென்ற நிலையில் , மதுபிரியர்கள் உடனடியாக மதுபானக் கடை திறக்க வேண்டும் என காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனடியாக மதுபானக் கடை திறக்கப்பட்டு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் காலையிலிருந்து நடைபெற்ற விடுதலை சிறுத்தை கட்சியினரின் முற்றுகை போராட்டம் பயனற்று போனது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி