

நெல்லை: தொழிலாளர்களுக்கான சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிடியூ தொழிற்சங்கத்தின் சார்பில் தொழிலாளர்களுக்கான சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி இன்று (மார்ச் 23) மேலப்பாளையத்தில் நடைபெற்றது. இதில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், அதிமுக நெல்லை மாநகர மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை எஸ்டிடியூ தொழிற்சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.