காவலர் கொலை வழக்கு.. சுட்டுப்பிடித்த போலீஸ்

53பார்த்தது
மதுரை மாவட்டத்தில் கடந்த 19ஆம் தேதி மலையரன் என்ற தனிப்படை காவலர் எரித்து கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து பெருங்குடி போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் குற்றவாளியான மூவேந்திரனை பிடித்த போலீசார், கொலை நடந்த இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, மறைத்து வைத்திருந்த ஆயுதத்தால் சார்பு ஆய்வாளரை வெட்டியதாக கூறப்படுகிறது. இதனால், அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

நன்றி: TamilJanamNews

தொடர்புடைய செய்தி