நெல்லை மாநகர சுத்தமல்லி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா இன்று (பிப்ரவரி 22) பள்ளியில் வைத்து நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பெருமாள் தலைமை தாங்கினார். இதில் குடி போதை விழிப்புணர்வு நாடகத்தை மாணவிகள் தத்ரூபமாக நடித்து காண்பித்தனர். இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.