கோவில்பட்டி - Kovilpatti

மும்பையில் இருந்து தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்: கோரிக்கை

மும்பையில் இருந்து தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்: கோரிக்கை

மும்பை வாழ் தென் மாவட்ட தமிழ் மக்களின் தொடர் கோரிக்கையை ஏற்று மும்பையில் இருந்து கொல்லம், தென்காசி, திருநெல்வேலி வழியாக தூத்துக்குடிக்கு சிறப்பு ரயிலை இயக்குமாறு தென்னக ரயில்வே பொது மேலாளருக்கும் மத்திய ரயில்வே பொது மேலாளருக்கும் தென்காசி எம்பி ராணி ஸ்ரீ குமார் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது "தென்காசி, மற்றும் தூத்துக்குடியை பூர்வீகமாக கொண்ட தமிழர்கள் தங்கள் குடும்பத்தினரோடு மும்பையில் வசித்து வருகின்றனர். இவர்கள் பண்டிகை காலங்களில் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு வந்து உறவினர்களோடு கொண்டாடுவது வழக்கம். மேலும் தொழில் மற்றும் வேலை நிமித்தமாகவும் பலர் தென் மாவட்டங்களில் இருந்து மும்பைக்கு பயணிக்கின்றனர். தென் மாவட்டங்களில் இருந்து மும்பைக்கு செல்லும் ரயில்களிலும் மற்றும் மும்பையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்களிலும் முன்பதிவு இருக்கைகள் முழுவதும் காலியாகி காத்திருப்பு பட்டியலில் உள்ளது. தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு இதுவரை மும்பைக்கு செல்ல நேரடி ரயில் சேவைகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மும்பையில் இருந்து தூத்துக்குடிக்கு சிறப்பு ரயிலை இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வீடியோஸ்


కరీంనగర్ జిల్లా