உரக்கடை உரிமையாளர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

83பார்த்தது
உரக்கடை உரிமையாளர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை
தூத்துக்குடி மாவட்டம். வீரபாண்டியபுரம், தெற்கு தெருவைச் சேர்ந்தவர் வேலாயுதம் சந்திரன் (55), இவர் குறுக்குச் சாலையில் லட்சுமி ஸ்டோர் என்ற பெயரில் உரம், பூச்சி மருந்து மற்றும் விதைகள் வியாபாரம் செய்து வந்தார். வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் கடன் பிரச்சனை காரணமாக மன வேதனையில் இருந்துள்ளார்.

இந்நிலையில் அதிகாலை 40 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டு வந்த அவர், கோவில்பட்டி - நள்ளி ரயில் நிலையமிடையே சென்னை - நாகர்கோயில் வந்தே பாரத் விரைவு ரயில் வண்டி முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அவரது மனைவி முருகலட்சுமி கொடுத்த புகார் அடிப்படையில் தூத்துக்குடி ரயில்வே காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டர் பெருமாள் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்தி