கோவில்பட்டி - Kovilpatti

கோவில்பட்டி: ஆசிரியர் கண்டித்ததால் கொசு மருந்தை குடித்த மாணவிகள்

கோவில்பட்டி: ஆசிரியர் கண்டித்ததால் கொசு மருந்தை குடித்த மாணவிகள்

கோவில்பட்டி அருகே ஆசிரியர் கண்டித்ததால் மனமுடைந்த 4 மாணவிகள் கொசு மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே அய்யனேரி கிராமத்தில் அரசு உதவி பெறும் பள்ளியில் 90 மாணவர், மாணவிகள் பயின்று வருகின்றனர். தலைமையாசிரியர் உள்பட 4 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். தற்போது காலாண்டு தேர்வு தொடங்கிய நிலையில் மாணவிகள் தேர்வில் பார்த்து எழுதியதாகக் கூறப்படுகிறது. இதை ஆசிரியர்கள் கண்டித்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம்(செப்.21) தாமதமாக சத்துணவு சாப்பிட சென்ற மாணவியை சத்துணவு ஊழியர் ஒருவரும் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த மாணவிகள் 4 பேரும் வீட்டிற்கு செல்வதற்கு முன் அய்யனேரி பேருந்து நிறுத்தம் அருகே உள்ள மருந்து கடையில் கொசு மருந்து வாங்கி குடித்துள்ளனர். பின்னர் சிறிது நேரத்தில் மாணவிகளுக்கு மயக்கம் ஏற்படவே, அதில் ஒரு மாணவி மட்டும் இதுபற்றி தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து கொசு மருந்து அருந்திய 4 மாணவிகளும் உடனடியாக மீட்கப்பட்டு கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


కరీంనగర్ జిల్లా