மீனவர்கள் கைது விவகாரம் - முதலமைச்சர் கடிதம்

67பார்த்தது
மீனவர்கள் கைது விவகாரம் - முதலமைச்சர் கடிதம்
நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 5 பேரை எல்லைதாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது. இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், “இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை சிறையில் உள்ள மீனவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளை வழங்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி