கோவில்பட்டி - Kovilpatti

பொறியாளர் அணிக்கு நிர்வாகிகள் தேர்வு: அமைச்சர் அழைப்பு

பொறியாளர் அணிக்கு நிர்வாகிகள் தேர்வு: அமைச்சர் அழைப்பு

தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் நகர, ஒன்றிய, பகுதி, பேரூர், கழக அளவில் தி. மு. க பொறியாளர் அணி பொறுப்புகளுக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று வடக்கு மாவட்டச் செயலாளர் அமைச்சர் பி. கீதா ஜீவன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "தி. மு. கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க கழக ஒருங்கிணைப்புக் குழு ஆய்வுக் கூட்டத்தில் மாநில இளைஞரணிச் செயலாளர், உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில், தி. மு. கழக பொறியாளர் அணியின் நகர, ஒன்றிய, பகுதி, பேரூர் கழக அளவில் பொறியாளர் அணிக்கு நிர்வாகிகளை விண்ணப்பம் மூலம் தேர்வு செய்திட கழக பொறியாளர் அணிச் செயலாளர் எஸ். கே. பி. கருணா அறிவித்துள்ளார். அவரது அறிவிப்புக்கு இணங்க, தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட நகர ஒன்றிய, பகுதி, பேரூர் கழக அளவில் பொறியாளர் அணி நிர்வாகிள் பொறுப்புக்கு விருப்பமுள்ளவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்திட வேண்டும். அதற்கென பிரத்யோக QR CODE உருவாக்கப்பட்டுள்ளது. இந்த QR CODE -ஆனது தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக அலுவலகத்திலும், அந்தந்த நகர, ஒன்றிய, பகுதி, பேரூர் கழக அலுவலகங்களிலும் உள்ளது. மேற்கண்ட விதிமுறைகளின்படி நடைபெறும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வீடியோஸ்


కరీంనగర్ జిల్లా