தஞ்சாவூர் - Thanjavur City

தஞ்சாவூரில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டவர் கைது

தஞ்சாவூரில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டவர் கைது

தஞ்சாவூரில், இளைஞரைத் தாக்கி செல்போனை பறித்துச் சென்றவரை காவல்துறையினர் நேற்று(செப்.10) கைது செய்தனர். தஞ்சாவூர் கீழவாசல் சேர்ந்தவர் அன்வர். இவர் தனது வீட்டு வாசலில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் செல்போனில் தகவல்களைப் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அன்வரைத் தாக்கிவிட்டு அவரது செல்போனை பறித்துச் சென்றனர். இது தொடர்பாக அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. இதனிடையே, இச்சம்பவம் குறித்து கிழக்கு காவல் நிலையத்தில் அன்வர் புகார் செய்தார். இதன் பேரில் காவல் துறையினர் கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணை நடத்தினர். இதில், தஞ்சாவூர் மேல வீதியைச்சேர்ந்த பிரவீன் (24), வடக்கு அலங்கத்தைச் சேர்ந்த பாலாஜி (29) ஆகியோர் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து, பாலாஜியை காவல் துறையினர் கைது செய்து, அவரிடமிருந்து பறிக்கப்பட்ட செல்போன், குற்றச் செயலுக்குப் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் பிரவீனையும் தேடி வருகின்றனர். விரைவாக செயல்பட்டு பாலாஜியை கைது செய்த நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளர் இரா. சோமசுந்தரம், உதவி ஆய்வாளர் தென்னரசு தலைமையிலான தனிப்படையினரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் பாராட்டினார்.

வீடியோஸ்


ఆదిలాబాద్ జిల్లా