தஞ்சாவூர் - Thanjavur City

தஞ்சாவூர் பகுதிகளில் நாளை மின்தடை அறிவிப்பு

தஞ்சாவூர் பகுதிகளில் நாளை மின்தடை அறிவிப்பு

தஞ்சை அருகே மாரியம்மன்கோயில் பகுதியில் நாளை மின் வினியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறியாளர் நல்லையன் தெரிவித்துள்ளார். தஞ்சை அருகே மாரியம்மன்கோயில் பகுதி துணை மின் நிலையத்தில் நாளை (18ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே நாளை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாரியம்மன்கோயில், ஞானம் நகர், பைபாஸ், சித்தர்காடு, கடகடப்பை, களக்குடி, ஆலங்கடி, நெட்டாநல்லுார், நெல்லித்தோப்பு, காந்தாவனம், குளிச்சப்பட்டு, அன்னை இந்திராநகர், பனங்காடு, எடவாக்குடி, யாகப்பாசாவடி, அம்மா குளம், ஆனந்தம் நகர், பரிசுத்தம் நகர், சூரக்கோட்டை ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது" எனத் தெரிவித்துள்ளார். திருக்கானூர்பட்டி பகுதி: வல்லம் அருகே திருக்கானூர்பட்டி பகுதியில் நாளை மின் வினியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறியாளர் ராஜ மனோகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு, வல்லம் அருகே திருக்கானுார்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (18ஆம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே நாளை காலை 9 முதல் மாலை 5 மணி வரை திருக்கானூர்பட்டி, சர்க்கரை ஆலை, குருங்குளம், நாகப்புடையான்பட்டி, தங்கப்புடையான்பட்டி, தோழகிரிப்பட்டி சுந்தராம்பட்டி, வாகரக்கோட்டை, அற்புதாபுரம், ஏழுப்பட்டி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

வீடியோஸ்


ఆదిలాబాద్ జిల్లా