இன்று நடைபெறவிருந்த தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஒத்திவைப்பு

63பார்த்தது
இன்று நடைபெறவிருந்த தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஒத்திவைப்பு
தஞ்சாவூரில் சனிக்கிழமை (செப். 7) நடைபெற இருந்த தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் ஒத்திவைக்கப்பட் டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது: தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக வேலை தேடும் இளைஞர்களுக்காக வெள்ளிக்கிழமை நடை பெற்ற சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் ஒசூரில் இயங்கிவரும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் கலந்து கொண்டு 13 பெண் மனுதாரர்களை தேர்வு செய்தது. தொடர்ந்து,
சனிக்கிழமை நடைபெற இருந்த இந்த வேலைவாய்ப்பு முகாம் நிர்வாகக் காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நேர்காணல் மீண்டும் நடைபெறும் நாள் மற்றும் நேரம் பின்பு அறிவிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு 04362 - 237037 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி