வடக்கு மாங்குடி ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம்

65பார்த்தது
தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம் வடக்குமாங்குடி ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் தொடர்பாக சிறப்பு கிராமசபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வி கனகராஜ் தலைமையில் நடைபெற்றது. துணை தலைவர் அப்துல் நாசர்,   ஊராட்சி செயலாளர் கார்த்திக், முன்னிலையில்  நடைபெற்ற இந்த கூட்டத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் விடுபட்ட பயணாளிகளை சேர்ப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில்  மக்கள் நலப்பணியாளர் ராஜேந்திரன், காவல்துறையினர், ஊரக வளர்ச்சி துறையினர், , மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், கிராமமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி