காவல் நிலையம் கட்ட தானமாக நிலம் அளித்தவருக்கு குவியும் பாராட்டு

60பார்த்தது
தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் காவல் நிலையத்திலிருந்து 12. 2. 2021 முதல் சோழபுரம் காவல் நிலையம் புதிதாக உருவாக்கப்பட்டு இந்த காவல் நிலையம் சோழபுரம் பேரூராட்சி சமுதாய கூடத்தில் இன்றுவரை செயல்பட்டு வருகிறது. 13 தாய்கிராமங்களுக்கும் 34 குக்கிராமங்களுக்கும் மக்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்த காவல் நிலையத்திற்கு நிரந்தர இடம் வேண்டி இப்பகுதி மக்களை காவல்துறையினர் கேட்டு வந்த நிலையில், தஞ்சை மாவட்டம் கும்பகோணம் காந்தி நகரைச் சேர்ந்த ஏ. ஜே. ஷாஜகான் என்பவர் தாமாக முன்வந்து சோழபுரம் பேரூராட்சிக்கு அருகே உள்ள புல எண் 192/4ல் உள்ள இருபதாயிரம் சதுர அடி இடத்தை சோழபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி மக்களின் பயன்பாட்டிற்காகவும், பொதுமக்களின் எதிர்கால நன்மை கருதி நிரந்தரமாக காவல் நிலையம் கட்ட தானமாக எழுதி அதன் பத்திரங்களை சோழபுரம் காவல் நிலையத்தில் வழங்கினார்.

தனது 45 ஆம் ஆண்டு திருமண நாளில் பல லட்சம் மதிப்பிலான இடத்தை தமிழக காவல்துறைக்கு தானமாக வழங்கிய ஷாஜகானுக்கு திருவிடைமருதூர் டிஎஸ்பி மற்றும் காவல் துறையினர் பொன்னாடை போர்த்தி நன்றி தெரிவித்தனர். இதேபோன்று சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி