பெட்ரோலுக்கு காசு கேட்ட ஊழியரை தாக்கிய இளைஞர்

84பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடி அருகே பெட்ரோல் பங்க் ஒன்று இயங்கி வருகிறது. அங்கு, நேற்றிரவு (செப்.10) இரண்டு இளைஞர்கள் தங்களது பைக்கிறகு பெட்ரோல் நிரப்ப சென்றுள்ளனர். தொடர்ந்து, பெட்ரோல் நிரப்பியதும் இருவரும் அங்கிருந்து கிளம்பியுள்ளனர். இதனைப் பார்த்த பங்க் ஊழியர், பெட்ரோலுக்கு காசு கொடுக்கவில்லை என கூறி பணத்தை கேட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த இளைஞர்கள், ஊழியரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி: NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி