தஞ்சாவூர் - Thanjavur City

நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து கரும்பு விவசாயிகள் போராட்டம்

நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து கரும்பு விவசாயிகள் போராட்டம்

தஞ்சாவூர் மாவட்டம் குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையின் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து தமிழக கரும்பு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையின் முன்பாக நேற்று தமிழக கரும்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆலையின் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவர் ஏ. கே. ஆர். ரவிச்சந்தர், தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் முகமது இப்ராஹிம், தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் எம். மணி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் கந்தவேல், செயலாளர் நாராயணசாமி, காவிரி உரிமை மீட்புக் குழு உறுப்பினர் வெள்ளாம்பெரம்பூர் துரை. ரமேஷ், தமிழக கரும்பு உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகி அறிவழகன், முன்னோடி கரும்பு விவசாயிகள் மஞ்சப்பேட்டை ராமச்சந்திரன், கண்டிதம்பட்டு கோவிந்தராஜ், விளார் செந்தில், சிலம்பரசன், அகிலன், சின்னதுரை, கல்யாணசுந்தரம், சுடர்வண்ணன், விஜயகுமார் மற்றும் திரளான விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

வீடியோஸ்


ఆదిలాబాద్ జిల్లా