தஞ்சை அருகே கார் கவிழ்ந்து விபத்து; 3 பேர் காயம்

50பார்த்தது
தஞ்சை அருகே கார் கவிழ்ந்து விபத்து; 3 பேர் காயம்
தஞ்சை அருகே கார் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் காயம் அடைந்தனர்.
திருச்சி துவாக்குடியை சேர்ந்தவர் சதிஷ் ரவி. இவருடைய மகன் சஞ்சிபா (வயது II). இவர் நேற்று காலை மயிலாடுதுறையில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்த சிலம்பப் போட்டியில் கலந்து கொள்வதற்காக காரில் சென்றிருந்தார். இவருடன் உறவினர்களான மணிகண்டன் (31)
மற்றும் மல்லிகா ஆகியோரும் சென்றிருந்தனர். அங்கு சிலம்ப போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு, மீண்டும் துவாக்குடியில் உள்ள தங்களது வீட்டை நோக்கி காரில் புறப்பட்டனர். காரை மணிகண்டன் ஓட்டியுள்ளார்.
தஞ்சை - விக்கிரவாண்டி புறவழிச்சாலையில் உள்ள குருங்களூர் வெண்ணாற்று பாலம் வந்தபோது, நிலைதடுமாறிய கார் அருகில் இருந்த பாலக்கட்டையின் மீது பலமாக மோதியது. இதில் கார் சாலையில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் சென்ற 3 பேரும் காயம் அடைந்தனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் தஞ்சை தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அந்த பகுதி யில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி