சிங்காநல்லூர் - Singanallur

கோவை: லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ. 1. 02 லட்சம் சிக்கியது

கோவை: லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ. 1. 02 லட்சம் சிக்கியது

கோவை மாநகராட்சி மத்திய மண்டல பொறியியல் பிரிவு இளநிலை பொறியாளராக உள்ளவர் விமல்ராஜ். இவர் கோவை மாநகராட்சி சார்பில் மத்திய மண்டல பகுதியான வ. உ. சி. பூங்கா உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் பணிகளை கவனித்து வருகிறார். இந்நிலையில், விமல்ராஜ் பணம் வசூல் செய்வதாக லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று(செப்.10) மாலை லஞ்ச ஒழிப்பு ஏடிஎஸ்பி திவ்யா தலைமையில் போலீசார் மத்திய மண்டலத்தில் உள்ள விமல்ராஜின் அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அலுவலகத்தை பூட்டி யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. யாரையும் வெளியேவும் விடவில்லை. அலுவலகத்தின் உள்ளே ஒவ்வொரு பகுதியாக போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். விமல்ராஜின் லேப்டாப் பேக்கை போலீசார் சோதனை செய்தபோது, அதில் கணக்கில் காட்டப்படாத ரூ. 1 லட்சத்து 2 ஆயிரம் பணம் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதனை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விமல்ராஜிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர். இதில் அவர் அந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் காட்டவில்லை என்று தெரிகிறது. இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் இளநிலை பொறியாளர் விமல்ராஜிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


మహబూబ్‌నగర్ జిల్లా