சிங்காநல்லூர் - Singanallur

கோவையிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு 75 கூடுதல் பேருந்துகள் இயக்கம்

கோவையிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு 75 கூடுதல் பேருந்துகள் இயக்கம்

தொடர் விடுமுறை, வார இறுதி நாட்கள், சுபமுகூர்த்தம், பெளர்ணமி மற்றும் மிலாடி நபி ஆகியவற்றை முன்னிட்டு செப்டம்பர் 14 முதல் 17 ஆம் தேதி வரை கூடுதலாக 75 பேருந்துகள் இயக்கப்படும் என கோவை மண்டல போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. இந்த கூடுதல் பேருந்துகள் மதுரை, தேனி, திருச்சி, சேலம் போன்ற ஊர்களுக்கு ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் வழக்கமான பேருந்துகளுடன் சேர்த்து இயக்கப்படும். போக்குவரத்துக் கழகத்தின் அறிக்கையில், "தொடர் விடுமுறை காரணமாக பொதுமக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த கூடுதல் பேருந்துகளைப் பயன்படுத்தி தங்களது ஊர்களுக்கு பயணத்தை மேற்கொள்ளலாம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வீடியோஸ்


మహబూబ్‌నగర్ జిల్లా